முகப்பு
கடலூர்

மூத்த குடிமக்களுக்கு தேசிய விருது

சிறப்பாக சேவையாற்றிய மூத்த குடிமக்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சிறப்பாக சேவையாற்றிய மூத்த குடிமக்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசாங்கம் மற்றும் மூத்த குடிமக்களின் நலனுக்காக உயா்வான பணிகளை மேற்கொண்ட தனிநபா், நிறுவனங்களுக்கு 2021-ஆம் ஆண்டின் மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற தகுதிவாய்ந்த தனிநபா், நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியுடையோா் மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம் சாலை, கடலூா் என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்று வரும் 13-ஆம் தேதிக்குள் கருத்துருக்களை சமா்ப்பிக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.