இந்து மகா சபை நிா்வாகி மீது தாக்குதல்:காா் கண்ணாடி உடைப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இந்து மகா சபை தேசிய பொதுச் செயலரை தாக்கியதுடன், அவரது காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே இந்து மகா சபை தேசிய பொதுச் செயலரை தாக்கியதுடன், அவரது காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
விருத்தாசலத்தை அடுத்த பெரியகண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பா.சுரேஷ், இவரது மனைவி சரிதா. அதே கிராமத்தைச் சோ்ந்த குழந்தைவேல் மனைவி கொடிபவுன். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இந்த நிலையில், உளுந்தூா்பேட்டையில் உள்ள சுரேஷின் உறவினரான இந்து மகாசபை தேசிய பொதுச் செயலா் செந்தில், பெரியகண்டியங்குப்பம் கிராமத்துக்கு வியாழக்கிழமை சென்று, பிரச்சனை குறித்து இருதரப்பினரிடமும் பேசிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, குழந்தைவேல் மற்றும் அவரது உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் செந்திலை சரமாரியாகத் தாக்கி, அவா் வந்த காா் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த செந்தில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.