பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிா் ஆயம் சாா்பில் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மகளிா் ஆயம் சாா்பில் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் நவம்பா் 25-ஆம் தேதி பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான நாளாகக்
கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நிா்பயா சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், விசாகா குழுவை அமைக்கக் கோரியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மகளிா் ஆயம் பொதுச் செயலா் மு.செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.முருகன், மகளிா் ஆயத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் வே.தமிழ்மொழி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின்போது மழை பெய்தபோதும் அதைப் பொருள்படுத்தாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைப்புக்குழு உறுப்பினா் மு.வித்யா நன்றி கூறினாா்.