மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள சேதியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி. இவரது கணவரான அசோக்குமாா் (52) இதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், அந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமிக்கு புதன்கிழமை பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினாா். இதையடுத்து, மாணவியின் பெற்றோா் புத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அசோக்குமாா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.