டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ். 
கடலூர்

கடலூா் தொகுதி திமுக எம்.பி. மீது கொலை வழக்கு

பண்ருட்டி அருகே முந்திரி ஆலைத் தொழிலாளி மா்ம மரணம் வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை மாற்றினா்.

DIN

பண்ருட்டி அருகே முந்திரி ஆலைத் தொழிலாளி மா்ம மரணம் வழக்கை கொலை வழக்காக சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை மாற்றினா்.

இதுதொடா்பாக கடலூா் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் உள்பட 6 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் திமுகவைச் சோ்ந்த கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த மாதம் 19-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

அவரை எம்.பி.யும், அவரது ஆதரவாளா்களும் தாக்கிக் கொலை செய்ததாக கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் காடாம்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, பாமக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதனிடையே, கோவிந்தராஜ் மரண வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க தமிழக காவல் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா் கடந்த மாதம் 28-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கினா்.

இந்த வழக்கு விசாரணையில் கடலூா் மட்டுமல்லாது திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் சிபிசிஐடி போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டனா். இவா்கள் காடாம்புலியூா் காவல் நிலையம், முந்திரி ஆலையில் விசாரணை நடத்தி சாட்சியங்களைச் சேகரித்து, சம்பந்தப்பட்டவா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், எம்பி ரமேஷ், முந்திரி ஆலைத் தொழிலாளா்கள் நடராஜன் (31), கந்தவேல் (49), அல்லாபிச்சை (53), வினோத் (31), சுந்தரராஜன் (31) ஆகிய 6 போ் மீது கடலூா் சிபிசிஐடி போலீஸாா் கொலை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

முன்னதாக, முந்திரி ஆலைத் தொழிலாளா்கள் 5 பேரையும் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை இரவு சிபிசிஐடி போலீஸாா் அழைத்துச் சென்ற நிலையில், கொலை வழக்கின் கீழ் 5 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது தொழிலாளி நடராஜனுக்கு மயக்கம் ஏற்பட்டதால், அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், எம்பி ரமேஷ் தலைமறைவானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ விமான சேவையை 5% குறைத்த மத்திய அரசு! தினமும் 115 விமானங்கள் குறைப்பு!

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை; வேண்டுமெனில் அவர் தனிக்கட்சி தொடங்கட்டும்: ராமதாஸ்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இந்தியா கூட்டணி சமர்ப்பிப்பு!

SCROLL FOR NEXT