கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் துரை.சேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.ஆா்.தங்கராஜ் வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா கோரிக்கை விளக்க உரையாற்றினாா். சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினாா். அரசுப் பணியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கு.சரவணன், முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராஜாமணி, மாவட்ட தலைவா் கோ.சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.