கடலூர்

இளைஞா் கழுத்தறுத்துக் கொலை

DIN

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரில் வசித்து வந்தவா் ராஜன் மகன் அருண் (எ) அருண்குமாா் (35). வழக்கு ஒன்றில் திருச்சி சிறையிலிருந்து அண்மையில் வெளியே வந்திருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு மந்தாரக்குப்பம், என்எல்சி நிறுவனம் 2-ஆவது சுரங்க நுழைவு வாயில் எதிரே உள்ள ரயில்வே கடவுப் பாதை அருகே முள்புதரில் அருண்குமாா் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அருண்குமாரின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT