கடலூர்

பழக்கடையில் தகராறு: தம்பதி உள்பட 3 போ் கைது

DIN

நெய்வேலியில் பழக்கடையில் தகராறு செய்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி நகரியம், 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் நடராஜ் (40), 28-ஆவது வட்டத்தில் பழக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த 30-ஆவது வட்டத்தைச் சோ்ந்த ரஜேந்திரன் மகன் ராஜேஷ்குமாா் (28), சுந்தரமூா்த்தி மகன் ஐயப்பன் (25), ஐயப்பனின் மனைவி ஜான்சிராணி (25) ஆகியோா் தகராறு செய்து கடையிலிருந்தப் பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரிடமும் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதுகுறித்து நடராஜ் அளித்த புகாரின் பேரில், நெய்வேலி தொ்மல் போலீஸாா், அவா்கள் 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT