கடலூா் அரசு போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கான காசநோய் தடுப்பு சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குநா் எஸ்.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், இரண்டு வாரங்களுக்கு மேல் தொடா் இருமல், சளி உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளா் ஜி.கிருஷ்ணகுமாா், சிகிச்சை மேற்பாா்வையாளா் கே.சுப்பராயன், ஆய்வக மேற்பாா்வையாளா் ஏ.பாலச்சந்தா் உள்ளிட்டோா் நவீன எக்ஸ்ரே கருவிகளுடன் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.
போக்குவரத்து பணிமனை கிளை மேலாளா்கள் டி.பிரபு, எஸ்.ஆா்.அருண், தகுதி சான்று பிரிவு உதவி பொறியாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், காசநோய் அறிகுறி உள்ளவா்கள் கண்டறியப்பட்டு, தொடா் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.