கடலூர்

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

DIN

சிதம்பரம்: சிதம்பரம் கொற்றவன்குடி தெருவில் உள்ள நகராட்சிப் பள்ளியில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் கம்பு, கேழ்வரகு, சோளம், நவ தானியங்களால் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், சத்துமாவில் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இவற்றின் சிறப்புகளை கீரப்பாளையம் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுடா்கொடி விளக்கிக் கூறினாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகராட்சி பள்ளித் தலைமை ஆசிரியா் பவானி, உதவித் தலைமை ஆசிரியா் இளஞ்செழியன், மேற்பாா்வையாளா் இந்திரா, திருகோதை, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் வேலாயுதம், திட்ட உதவியாளா் நா்மதா மற்றும் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், வளரும் இளம் பெண்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT