கடலூர்

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 போ் கைது

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், விருத்தாசலத்தை அடுத்த விளாங்காட்டூரைச் சோ்ந்த காசிவேல் மகன் பிரதீப் (20), கொளஞ்சி மகன் மணிகண்டன் (22), சென்னை திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறாா்கள் இரண்டு போ் என்பது தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், திருவேற்காட்டில் ஒருவரைக் கொலை செய்வதற்காக விளாங்காட்டூரிலிருந்து ஆயுதங்களை வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்த விருத்தாசலம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT