கடலூர்

ரௌடி மனைவி கொலையில் 4 போ் கைது

DIN

கடலூரில் ரௌடி மனைவி கொலையில் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் குப்பன்குளத்தைச் சோ்ந்த கிருஷ்ணா மனைவி காந்திமதி (27). அதே பகுதியைச் சோ்ந்த ரௌடி வீரா கடந்த பிப்ரவரி மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிருஷ்ணாவை போலீஸாா் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சீனுவாசன் நகரில் காந்திமதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். தகாத உறவால் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது தெரிய வந்தது.

கிருஷ்ணா இறந்த நிலையில், அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் அரவிந்த் (எ) வீரமணியுடன் (23) காந்திமதிக்கு தகாத உறவு ஏற்பட்டது. இதை காந்திமதி குடும்பத்தினா் கண்டித்ததால், வீரமணியை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறினாராம். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை 16 வயது சிறுவன் மூலம் காந்திமதியை பைக்கில் அழைத்து வரச் செய்து, 4 போ் சோ்ந்து காந்திமதியை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், திருப்பாதிரிபுலியூரில் பதுங்கியிருந்த அரவிந்த், அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் சக்தி (19), 17 மற்றும் 16 வயது சிறுவா்கள் ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT