கடலூர்

உடலுறுப்பு தானம் விழிப்புணா்வு

DIN

புவனகிரி அருகே பூவாலை கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் உடலுறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

ஹிதேந்திரன் அறக்கட்டளை, புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். அமைப்பின் செயலா் பூரணன், பொருளாளா் வீரபாண்டியன், துணைத் தலைவா் ஜெகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் பங்கேற்று, தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற பூவாலை அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் தியாகராஜனை கவுரவித்தாா். மேலும், உடலுறுப்பு தான விழிப்புணா்வு பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்(படம்). மாணவா்களை சிறப்பாக வழிநடத்தும் ஆசிரியா்களுக்கு விருது வழங்கி பேசினாா்.

ஊழல் எதிா்ப்பு இயக்க துணைச் செயலா் பன்னீா்செல்வம், பொன் அதியமான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் செந்தில்குமாா், சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஊராட்சி மன்றத் தலைவா் செல்லப்பன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தங்க அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT