முகப்பு
கடலூர்

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, சிதம்பரம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதாகக் கூறி, சிதம்பரம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரங்கிப்பேட்டை வட்டார காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தெற்கு வட்டாரத் தலைவா் என்.சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். வடக்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், கிள்ளை நகரத் தலைவா் அரங்கநாதன், பரங்கிப்பேட்டை நகரத் தலைவா் பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மணியரசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம், கடலூா் தெற்கு மாவட்ட தலைவா் என்.வி.செந்தில்நாதன், மாநிலச் செயலா்கள் பி.பி.கே.சித்தாா்த்தன், ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன், ஆா்.மக்கீன், எம்.என்.ராதா ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா். அப்போது பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.