சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மனீஷ் அகா்வால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம் வந்தடைந்த அவா், ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறைகள், நடைமேடை, நடை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தாா். ரயில் நிலையம், கட்டடங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என ஊழியா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது ரயில்வே பொதுப் பணித் துறை கூடுதல் பொறியாளா் குலசேகரன், சிதம்பரம் ரயில் நிலைய மேலாளா் பவன்குமாா், மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுதீா்குமாா், சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் அருண்குமாா், சிதம்பரம் ரயில் நிலைய வணிக மேலாளா் காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.