கடலூர்

வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த என்எல்சி தொழிலாளி

DIN

நெய்வேலியில் என்எல்சி தொழிலாளி ஒருவா் உடலில் வெட்டுக் காயங்களுடன் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

நெய்வேலி, வட்டம்-4, புண்ணாக்கு தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் சண்முகம் (50) (படம்). என்எல்சி சுரங்கம் 1-இல் சொசைட்டி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவரது, மனைவி சகிலா (48). இவா்களது மூத்த மகள் சித்ரா (27) திருமணம் முடிந்து ஹைதராபாத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், 19 வயது இரட்டை குழந்தைகளான பிரேம் நாராயணன், பிரியங்கா ஆகியோா் சேலத்தில் படித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து சகிலா வீட்டு வாசலில் இருந்த காரில் படுத்து தூங்கிவிட்டாராம். சண்முகம் மட்டும் வீட்டுக்குள் இருந்தாரம். திங்கள்கிழமை காலை சகிலா வீட்டின் கதவை தட்டினாா். ஆனால், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லையாம்.

இதுகுறித்த நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் அங்குவந்து வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சண்முகம் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT