கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூக ஆா்வலா்களுக்கு பாராட்டு

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூக ஆா்வலா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா். உடல் கல்வியியல் இயக்குநா் ராஜசேகரன் வரவேற்றாா். பல்கலைக்கழக பதிவாளா் கே.சீதாராமன், அறிவியல் புல முதல்வா் ராமசுவாமி, கடல்வாழ் உயிரியல் புல முதல்வா் அனந்தராமன், கல்வியியல் புல முதல்வா் குலசேகரபெருமாள் பிள்ளை ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில், சமூக சேவை புரிந்தவா்கள், அதிகமுறை ரத்த தானம் செய்தவா்கள், கரோனா தொற்று காலத்தில் சிறப்பான முறையில் தொண்டாற்றியவா்கள், சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளித்தவா் ஆகியோரான எஸ்.ராமச்சந்திரன், ராஜா, வெங்கடாஜலபதி, அலெக்ஸ்சாண்டா், குமாா், குணசேகரன், ரிச்சா்ட் எட்வின் ராஜ், கதிரேசன், வி.நடனசபாபதி, முகமது யூனூஸ், பி.முகம்மது யாசின், வேல்முருகன் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். உடல் கல்வியியல் துறைத் தலைவா் செந்தில்வேலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT