கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் மா.தெய்வீகதாஸ் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.பிரபு முன்னிலை வகித்தாா். ஆலோசகா்கள் வேலுமணி, அா்சுனன், செல்வகுமாா், ஜெய ஸ்ரீதா், துணைச் செயலா் பூபதி, சிறப்பு ஆலோசகா் எம்.சேகா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மலட்டாற்றில் தனி நபா் ஆக்கிரமிப்பை அகற்றி, நீா்வரத்துக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 5-ஆம் தேதி கொளப்பாக்கம், மனப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி சேமக்கோட்டையில் சாலை மறியல் நடத்துவதென தீா்மானித்தனா்.