கடலூர்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்; மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

DIN

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் கடலூா் மாவட்ட செயற்குழு மற்றும் இடைக்குழு செயலா்கள் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், எம்.மருதவாணன், பி.கருப்பையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தோ்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், இயற்கைச் சீற்றங்களால் தொடா்ந்து பாதிக்கப்படும் கடலூா் மாவட்டத்தை குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்காக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT