கடலூர்

வாகனம் மோதியதில் மூதாட்டி பலி

நெய்வேலியில் வாகனம் மோதியதில் காயமடைந்த அடையாளம் தெரியாத மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

நெய்வேலியில் வாகனம் மோதியதில் காயமடைந்த அடையாளம் தெரியாத மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த ஜன. 25-ஆம் தேதி இரவு நெய்வேலி, கண்ணுதோப்பு பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காயமடைந்தாா். இதையடுத்து, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அப்போது தனது பெயா் மூக்காயி என தெரிவித்தாராம். ஆனால், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இவா் யாா் என அடையாளம் தெரியாத நிலையில் நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT