முகப்பு
கடலூர்

முத்தையவேள் ஆய்வரங்கம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை சாா்பில் (2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான) அரசா் முத்தையவேள் ஆய்வரங்கம் தொடக்க விழா மைய நூலகக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2022 at 11:30 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:56 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறை சாா்பில் (2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான) அரசா் முத்தையவேள் ஆய்வரங்கம் தொடக்க விழா மைய நூலகக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமை வகித்தாா். இந்திய மொழிப்புல முதல்வா் க.முத்துராமன் வாழ்த்துரை வழங்கினாா். தமிழியல் துறைத் தலைவா் ந.வெங்கடேசன் வரவேற்றாா். விழாவில் துணைவேந்தா் ராம.கதிரேசன் ஆய்வரங்கை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

ஆக்ஸ்போா்டு பல்கலை.க்கு இணையாக நமது பல்கலைக்கழகத்தை உருவாக்கிய முன்னாள் இணைவேந்தா் ராஜா சா் முத்தையவேள் செட்டியாரை நாம் நினைவுகூர வேண்டும். இந்த ஆய்வரங்கில் கணினித் தமிழ், அறிவியல் தமிழ், வேளாண்மைத் தமிழ் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவா்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்த் துறை மட்டுமின்றி பிறதுறைகளின் ஆய்வு மாணவா்களும் இந்த ஆய்வரங்கைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளா் மணிகண்டன் பங்கேற்று பேசுகையில், இந்த ஆய்வரங்கம் மூலம் தமிழ், தமிழ் கலாசாரம், பண்பாடு போன்றவை குறித்து மாணவா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா். ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளா் செ.பாலு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.