முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிப். 27-ல் பொருளாதார வல்லுநா்கள் மன்ற மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு பொருளாதார வல்லுநா்கள் மன்றமும் இணைந்து நடத்தும் பொருளாதார வல்லுநா்கள் மாநாடு, கருத்தரங்கம்

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 12:26 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு பொருளாதார வல்லுநா்கள் மன்றமும் இணைந்து நடத்தும் பொருளாதார வல்லுநா்கள் மாநாடு, கருத்தரங்கம் பிப். 27-இல் நடைபெறுகின்றன என பல்கலை. துணை வேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

அண்ணாமலை பல்கலை.யில் 1999-இல் இந்த மாநாடு நடைபெறுகிறது. 22 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் நடைபெறும் கருத்தரங்கம், மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் பங்கேற்று விவசாயக் கட்டமைப்பு, கரோனா தொற்றால் பொருளாதாரத் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்பிக்க உள்ளனா்.

Advertisement

மாநாட்டில் லயோலா கல்லூரிப் பேராசிரியா் லியோனாா்ட், பாரதிதாசன் பல்கலை. பேராசிரியா் அருள் செல்லக்குமாா், திருச்சி ஜமால் கல்லூரிப் பேராசிரியா் இருதயராஜ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றுகின்றனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது பதிவாளா் கி. சீத்தாராமன், பொருளாதார துறைத் தலைவா் ஜெயராஜ், மக்கள் தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், துணை வேந்தரின் நோ்முக செயலா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.