கடலூர்

கடலூா் மாவட்டத்தில் நாளை சிறப்பு கிராமசபை கூட்டம்

DIN

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (ஜன.5) சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2022-23 ஆம் நிதியாண்டுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கான (100 நாள் வேலை) திட்டமிடல் மற்றும் பணியாளா்கள் எண்ணிக்கை தயாரித்தல் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் ஜன.5 (புதன்கிழமை) நடத்தப்பட வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபையை அந்தந்த ஊராட்சிமன்றத் தலைவா் நடத்திட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

மேலும், கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு ஆட்சியா் வேண்டுகோள் விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT