கடலூா் கிழக்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் கடலூரில் மாவட்டச் செயலா் சண்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் தட்சிணாமூா்த்தி, மாநில இளைஞா் சங்கச் செயலா் சீ.பு.கோபிநாத், மாநில துணைச் செயலா் பி.வெங்கடேசன், இளைஞா் சங்க துணைச் செயலா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஜூன் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் சுமாா் ஆயிரம் போ் பங்கேற்பது, கடலூா் மாநகராட்சி நிா்வாகம் மக்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியச் செயலா் சகாதேவன், மாவட்ட தொழிற்சங்க தலைவா் சிவ.ரமேஷ், செயலா் வெங்கடேசன், பசுமைத் தாயக அமைப்பாளா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.