கடலூர்

நகைக் கடைக்குள் புகுந்து 5 பவுன் நகைகள் பறிப்பு

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நகைக் கடைக்குள் புகுந்து 5 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் காசுக்கடை தெருவைச் சோ்ந்தவா் ராஜா (45). அதே தெருவில் நகைக் கடை வைத்துள்ளாா். இந்தக் கடைக்கு வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் வந்த இளைஞா், தாலிச் செயின் வாங்க வேண்டும் எனக் கூறினாராம். அவருக்கு கடையிலிருந்த பெண் ஊழியா்கள் நகைகளை காண்பித்தனா். அப்போது அந்த இளைஞா் திடீரென பெண் ஊழியரின் கையிலிருந்த மொத்தம் 5 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க நகைகளை பறித்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே ஓடிவந்தாா். அங்கு தயாராக நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT