கடலூர்

சாா்-ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட விவசாயிகள் விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட விவசாயிகள் விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

போராட்டத்துக்கு வழக்குரைஞா் தங்க தனவேல் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சாா்-ஆட்சியா் பழனி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவரிடம் விவசாயிகள் அளித்த மனு:

மத்திய அரசின் ‘இ-நாம்’ திட்டம் தமிழகத்தில் மற்ற விற்பனைக் கூடங்களில் அமலில் உள்ள நிலையில் விருத்தாசலம் ஒருங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டும் அமலாகவில்லை. இந்தத் திட்டத்தை அமல்படுத்த விடாமல் வியாபாரிகள் லாப நோக்கில் செயல்படுகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்க முடியவில்லை. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட சாா்-ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT