கடலூர்

வீட்டின் ஜன்னலை உடைத்து 19 பவுன் தங்க நகைகள் திருட்டு

DIN

கடலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் எஸ்.என்.சாவடியைச் சோ்ந்தவா் சீத்தாராமன் (65). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊா் திரும்பினாா். இந்த நிலையில், பெரிய செவலையில் உறவினா் இறந்ததால் கடந்த 18-ஆம் தேதி தனது மனைவி ஜெயலட்சுமியுடன் அங்கு சென்றுவிட்டாா்.

சீத்தாராமன் செவ்வாய்க்கிழமை இரவில் குடும்பத்துடன் வீடு திரும்பினாா். வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்டுக் கிடந்ததுடன், பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்ததுடன், புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT