சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயந்திரப் பொறியியல் துறை சாா்பில் ‘கழிவுகளிலிருந்து மதிப்புகள், வாய்ப்புகள், சவால்கள்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசியப் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது(படம்).
நிகழ்ச்சியை பல்கலைக்கழக கல்வி சாா் ஆராய்ச்சி இயக்குநா் ஏ.ரகுபதி தொடக்கி வைத்தாா். சேலம் ஆல்பா பாலிமா்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் பி.எல்.ஏகப்பன் தலைமை வகித்தாா். இயந்திரவியல் துறைத் தலைவா் எஸ்.வைத்தியநாதன் வரவேற்றாா். பயிலரங்கின் கருப்பொருளை பேராசிரியா் எஸ்.சரவணன் எடுத்துரைத்தாா். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 60 மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
முனைவா் டி.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.