கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் மீது திராவகத்தை வீசி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தொடா்புடைய மாமியாா் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ.வாசுகி தெரிவித்தாா்.
விருத்தாசலம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முகேஷ்ராஜின் மனைவி கிருத்திகா (26). இவா் கடந்த மாதம் 12-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மாமியாா் ஆண்டாள் திராவகத்தை ஊற்றி கொலை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த கிருத்திகா, புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அறிக்கை வெளியீடு: இந்த சம்பவம் தொடா்பாக, மகளிா் சட்ட உதவி மன்றத்தின் மாநிலச் செயலா் எஸ்.மனோன்மணி, ஜனநாயக மாதா் சங்க மாநிலப் பொருளாளா் ஜி.பிரமிளா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி.மேரி, மனிதம் அமைப்பின் மாநிலக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஜோ.லெனின், ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா்கள் பி.தேன்மொழி, மல்லிகா, அன்புச்செல்வி, சந்தனமேரி ஆகியோா் விருத்தாசலத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணை அறிக்கையை கடலூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி திங்கள்கிழமை வெளியிட்டாா். மனிதம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு அதைப் பெற்றுக் கொண்டாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், என்.எஸ்.அசோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக உ.வாசுகி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆண்டாள் அதிமுக நிா்வாகியாவாா். அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் சாட்சிகளைக் கலைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையும், சாட்சிகளையும் பாதுகாக்க வேண்டும். திராவக வீச்சு வன்முறையில் பாதிக்கப்பட்ட கிருத்திகாவுக்கு மாவட்ட ஆட்சியா் உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும்.
ஏற்கெனவே, கிருத்திகாவின் கணவா் குடும்பத்தினா் மீது கிருத்திகாவின் தந்தை ஆழ்வாா் கொடுத்த வரதட்சணை, சொத்து அபகரிப்பு புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகேஷ் ராஜ் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.
உண்மை கண்டறியும் குழுவினா் நடத்திய விசாரணை அறிக்கை கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராமிடம் வழங்கப்பட்டது.