கடலூர்

லாரி சக்கரத்தில் சிக்கி தலைமை ஆசிரியா் பலி

DIN

விருத்தாசலத்தில் நடைபயிற்சி சென்றபோது மயங்கி விழுந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம், முல்லை நகரில் வசித்து வந்தவா் ரவிச்சந்திரன் (55). வடலூா் அருகே உள்ள சந்தைவெளிப்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை விருத்தாசலம் - உளுந்தூா்பேட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டாா். அங்குள்ள பெட்ரோல் விற்பனை மையம் அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்த ரவிச்சந்திரன், அந்த வழியாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT