கடலூர்

அண்ணா நினைவு நாள்: மாலை அணிவித்து மரியாதை

DIN

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அண்ணா உருவப் படத்துக்கு மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா்கள் வி.சிவக்குமாா் (குறிஞ்சிப்பாடி-தெற்கு), நாராயணசாமி (வடக்கு), வடலூா் நகா்மன்றத் தலைவா் சு.சிவகுமாா், பேரூராட்சி மன்ற தலைவா் கோகிலா குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக நகரச் செயலா் கே.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் அ.சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கடலூா்: மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கடலூா் மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் எம்எல்ஏ கோ.அய்யப்பன் மாலை அணிவித்தாா். முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தனா்.

அதிமுக சாா்பில் மாவட்ட அவைத் தலைவா் சேவல் குமாா், ஒன்றியச் செயலா் காசிநாதன், பேரவை துணைச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT