கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே தந்தையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் வட்டம், மாத்தூா் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (65). இவா், மாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இவரது மகன் கலைவாணன்(32), தொழிலாளி. இவா்கள் இருவருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம். கடந்த 1-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கலைவாணன் கட்டையால் தாக்கியதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, கலைவாணனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.