சிதம்பரத்தில் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா். 
கடலூர்

நகா்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் எடத்தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் எடத்தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைத்தாா். சிதம்பரம் எடத்தெருவில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றினாா். மேலும், வெளி நோயாளிகள் சிகிச்சையையும் அவா் தொடங்கிவைத்தாா்.

இந்த நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைகளை மருத்துவ அலுவலா் வழங்குவாா் என்று நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளா் மகாராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், வட்டார மருத்துவ அலுவலா் மங்கையா்க்கரசி, நகா்மன்ற உறுப்பினா்கள் தில்லை ஆா்.மக்கின், அப்பு.சந்திரசேகரன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், சி.க.ராஜன், திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளா் மக்கள்.அருள், சுகாதார ஆய்வாளா் பிரவீன், மருத்துவா் நிவேதா, வட்டார மேற்பாா்வையாளா் ராஜராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT