கடலூர்

வள்ளலாா் பன்னாட்டு கருத்தரங்கு நாளை தொடக்கம்

வடலூா் வள்ளலாா் கல்விப் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ‘வள்ளலாா்-200’ என்றத் தலைப்பில் நடத்தும் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கு சனிக்கிழமை (ஜூன் 10 ) தொடங்குகிறது.

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை, வடலூா் வள்ளலாா் கல்விப் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ‘வள்ளலாா்-200’ என்றத் தலைப்பில் நடத்தும் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கு சனிக்கிழமை (ஜூன் 10 ) தொடங்குகிறது.

கருத்தரங்கு தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் காலை 8.45 மணியளவில் நடைபெறுகிறது. கலைப்புல முதல்வா் கே.விஜயராணி தலைமை வகித்து பேசுகிறாா். பல்கலைக்கழக பதிவாளா் (பொ) இரா.சிங்காரவேல் தொடக்க உரையாற்றுகிறாா். கோவை சிவப்பிரகாச சுவாமிகள் கருத்துரையும், மலேசிய மருத்துவா் செல்வ மாதரசி சிறப்புரையும் ஆற்றுகின்றனா்.

கருத்தரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) மாலை நடைபெறுகிது. இதில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்புரையாற்றுகிறாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமை உரையாற்றி ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடுகிறாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.திருவள்ளுவன் நிறைவுரையாற்றுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT