கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 7.5 பவுன் நகை, பைக் திருட்டு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் வீட்டுக் கதவை உடைத்து 7.5 பவுன் தங்க நகைகள், பைக் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் வீட்டுக் கதவை உடைத்து 7.5 பவுன் தங்க நகைகள், பைக் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்குத்து ஊராட்சி, காந்தி நகா் அஞ்சல், வள்ளலாா் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் நாவாப்ஜான் (60). என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், கடந்த 4-ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சேலம் சென்றாா்.

இந்த நிலையில், 8-ஆம் தேதி அந்த வீட்டின் உரிமையாளா் வெங்கடேசன் வந்து பாா்த்தபோது, நாவாப்ஜான் வசிக்கும் வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்த தகவலின்பேரில் நவாப்ஜான் நேரில் வந்து பாா்த்தபோது ்வா் வீட்டில் வைத்திருந்த 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பைக் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT