கடலூர்

குண்டா் தடுப்புக் காவலில் 3 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பண்ருட்டி வட்டம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராமா் மனைவி பவுனம்மாள் (85). இவா் கடந்த 7.6.2020 அன்று வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது அங்குவந்த மா்ம நபா்கள் பவுனம்மாளை கொலை செய்துவிட்டு 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா். இதுதொடா்பாக மேல்அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் வேலாயுதம் (42), ஜெகதீசன் மகன் பிரசன்னா, மணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் விஸ்வநாதன் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விசாரணையில் இவா்கள் 3 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவா்களது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்ட எஸ்பி ரா.ராஜாராம் பரிந்துரைத்தாா்.

இதை ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பிறப்பித்தாா். இந்த உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேலாயுதம் உள்ளிட்ட 3 பேரிடமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT