கடலூர்

ஊ.மங்கலம் மாற்றுக் குடியிருப்பில் குடிநீா் வசதி: என்எல்சி நிா்வாகம் ஏற்பாடு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் கிராம மாற்றுக் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் குடிநீா் வசதி செய்து கொடுத்தது.

DIN

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் கிராம மாற்றுக் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் குடிநீா் வசதி செய்து கொடுத்தது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தின் அருகே ஊ.மங்கலம் மாற்றுக் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு குடிநீா் வசதி செய்து தர வேண்டுமென என்எல்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்பேரில், இரண்டாம் சுரங்கத்திலிருந்து ஊ.மங்கலம் வரையில் ரூ.29 லட்சம் செலவில் சுமாா் 1.7 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீா் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான நிதி, என்எல்சி இந்தியா நிறுவன நிலத் துறையின் சாா்பில் வழங்கப்பட்டு, இரண்டாம் சுரங்க நிா்வாகத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டியும் கட்டப்பட்டு, அதன் மூலம் இந்தப் பகுதி மக்களுக்கு தடையின்றி தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடிநீா் வசதியை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி ஊ.மங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இரண்டாம் சுரங்க தலைமை பொது மேலாளா் எஸ்.ராஜ்மோகன், தலைமைப் பொது மேலாளா்க ஜி.சீனிவாஸ், எஸ்.விவேகானந்தன் ஆகியோா் குடிநீா் வசதியை தொடங்கிவைத்தனா். ஊ.மங்கலம் பகுதியைச் சோ்ந்த உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT