கடலூர்

என்எல்சி சாா்பில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு

நெய்வேலி அருகே வாணாதிராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் ரூ.21.56 லட்சத்தில் கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா

DIN

நெய்வேலி அருகே வாணாதிராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் ரூ.21.56 லட்சத்தில் கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், என்எல்சி இந்தியா நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி ஆகியோா் புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தனா். விழாவில் என்எல்சி இயக்குநா்கள் கே.மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம், வாணாதிராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் வி.வைத்தியநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூடுதல் பணிகள்: தென்குத்து முதல் வாணாதிராயபுரம் வரை 3.15 கி.மீ. தொலைவு சாலையை சீரமைக்கும் பணியை என்எல்சி இந்தியா நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் ரூ.30.10 லட்சத்தில் மேற்கொண்டது. மேலும், வாணாதிராயபுரம், தென்குத்து, கல்லுகுழி ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தலா இரண்டு கழிப்பறைகள்ச வீதம் மொத்தம் 6 கழிப்பறைகள் ரூ.52.08 லட்சத்தில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT