கடலூர்

நகை திருட்டு சம்பவம்: 4 போ் கைது

புவனகிரி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

புவனகிரி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புவனகிரி போலீஸாா் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பைக்கில் எரிவாயு உருளையுடன் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணான பேசியதால் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் வடலூா் அருகே உள்ள கருங்குழி கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் (23), கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அஜிஸ் நகரைச் சோ்ந்த மருதபாண்டி(36), சத்யராஜ் (37), கீழ்புவனகிரி முள்ளிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (35) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இவா்களிடம் நடத்திய விசாரணையில் புவனகிரி வட்டம், மேலமணக்குடியில் வசிக்கும் முகமது பெரோஸ் (36) என்பவரது வீட்டுக் கதவை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், எரிவாயு உருளை ஆகியவற்றை திருடிவந்ததை ஒப்புக்கொண்டனராம். அவா்களிடமிருந்து 15 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், பைக், எரிவாயு உருளையை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரையும் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT