கடலூர்

பிச்சாவரம் அருகே ஆற்றில் விழுந்த கார்: நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலி

DIN

பிச்சாவரம் அருகே ஆற்றில் கார் விழுந்ததில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலியானார்.

சிதம்பரத்தில் பிரபல நகைக்கடை நடத்தி வருபவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி(42). இவரது தம்பி நாம்தேவ், சுபாங்கிக்கு திங்கள்கிழமை அதிகாலை கார் ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தெற்கு பிச்சாவரம் வடிகால் ஆற்றில் தலைகுப்புற விழுந்தது. 

இதில் நாம்தேவ் காரில் இருந்து குதித்து தப்பித்தார். காருடன் சுபாங்கி மங்கேஷ்குமார் ஆற்றில் சிக்கி பலியானார். தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்டுத் துறையினர் கார் மற்றும் உடலை மீட்டனர். மேலும் உடலை உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT