கடலூர்

பிச்சாவரம் அருகே ஆற்றில் விழுந்த கார்: நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலி

பிச்சாவரம் அருகே ஆற்றில் கார் விழுந்ததில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலியானார். 

DIN

பிச்சாவரம் அருகே ஆற்றில் கார் விழுந்ததில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலியானார்.

சிதம்பரத்தில் பிரபல நகைக்கடை நடத்தி வருபவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி(42). இவரது தம்பி நாம்தேவ், சுபாங்கிக்கு திங்கள்கிழமை அதிகாலை கார் ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்த போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தெற்கு பிச்சாவரம் வடிகால் ஆற்றில் தலைகுப்புற விழுந்தது. 

இதில் நாம்தேவ் காரில் இருந்து குதித்து தப்பித்தார். காருடன் சுபாங்கி மங்கேஷ்குமார் ஆற்றில் சிக்கி பலியானார். தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்டுத் துறையினர் கார் மற்றும் உடலை மீட்டனர். மேலும் உடலை உடற்கூராய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியை இவர் இயக்கினால் எப்படி இருக்கும்?

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் நார்வே..! நிறைவேற்றிய எர்லிங் ஹாலண்ட்!

முதல்வர் ஸ்டாலின், அஜித், அரவிந்த் சாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி

குறுகிய காலத்தில் முடிவடையும் பிரபல தொடர்!

SCROLL FOR NEXT