நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பால் வேன் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், இடைச்செருவாய் கிராமத்தில் வசித்து வந்தவா் ராமா் (74). இவா், திங்கள்கிழமை இரவு திட்டக்குடி-தொழுதூா் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த பால் வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.