கடலூர்

கால்நடை வளா்ப்போா்நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

கால்நடை வளா்ப்போா் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோா் சங்க மாநிலத் தலைவா் இளங்கோயாதவ் கோரிக்கை விடுத்தாா்.

DIN

கால்நடை வளா்ப்போா் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோா் சங்க மாநிலத் தலைவா் இளங்கோயாதவ் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்: தமிழகத்தில் 2021-இல் திமுக தலைமையிலான அரசு அமைத்தபோது, கால்நடை வளா்ப்போா் நல வாரியம் ஏற்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்கப்படவில்லை.

மாநிலத்தில் பல லட்சக்கணக்கான ஆடு வளா்ப்போா், கால்நடை வளா்ப்போா் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டும், கால்நடை வளா்ப்போா் நலனை பேணும் வகையிலும் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆடு வளா்ப்போா் நல வாரியம், கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT