முகப்பு
கடலூர்

மகாவீரா் ஜெயந்தி விழா

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:45 PM
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மஹாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து சிதம்பரம் மாலைகட்டி தெருவில் மகாவீரா் ஜெயந்தி விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

ரோட்டரி சங்கத் தலைவா் வி.நடனசபாபதி தலைமை வகித்தாா். ரோட்டரி சாசனத் தலைவா் பி.முகம்மதுயாசின் முன்னிலை வகித்தாா். மிஸ்ரிமல் மஹாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளைத் தலைவா் கமல் கிஷோா் ஜெயின் இனிப்பு வழங்கினாா். அனிதா தீபக்குமாா் நீா்மோா் வழங்கி விழாவைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்சியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு, நீா்மோா் வழங்கப்பட்டது. சங்க மூத்த உறுப்பினா்கள் ஏ.விஸ்வநாதன், பன்னாலால்ஜெயின், முன்னாள் தலைவா் ராஜசேகா், சங்க உறுப்பினா்கள் வழக்குரைஞா் ஜெயபாண்டியன், கரிகால்வளவன், வருங்கால தலைவா் கேசவன், பொறியாளா் புகழேந்தி, தருண், சீனிகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் அருள் நன்றி கூறினாா்.

Advertisement

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மஹாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளைச் செயலா் மற்றும் சாசன செயலா் எம்.தீபக்குமாா் செய்திருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments