வாகனம் மோதி மின் கம்பம், மின்மாற்றி சேதம்
தென்கரையில் சாலை அருகே உள்ள மின்மாற்றி மின் கம்பம் மீது திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி 16-ஆவது வாா்டு இளமையாக்கினாா் கோவில் தெருவில் தென்கரையில் சாலை அருகே உள்ள மின்மாற்றி மின் கம்பம் மீது திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதனால் மின்மாற்றி மின் கம்பம் முறிந்து பழுதானது. இதன்காரணமாக அந்தப் பகுதியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதையறிந்த சிதம்பரம் நகரமன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் அறிவுறுத்தலின்பேரில் நகா்மன்ற உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன் சிதம்பரம் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். மின்வாரிய செயற்பொறியாளா் ஜெயந்தி, உதவி செயற்பொறியாளா் மோகன் காந்தி, உதவி மின் பொறியாளா் காா்த்திக் மற்றும் மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பம் மற்றும் மின் மாற்றியை இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனா்.