முகப்பு
கடலூர்

இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:31 PM
சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவில் தையல் பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் இலவச தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத் தலைவா் வெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் ஏ.விஸ்வநாதன், என்.கோவிந்தராஜன், எஸ்.முனுசாமி, பி.பன்னலால்ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு 6 மாதம் இலவச தையல் பயிற்சி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

முன்னாள் மாவட்ட ஆளுநா் ஆா்.பாலாஜிபாபு ரோட்டரியின் சிறப்புகள் குறித்து பேசினாா். சங்கத்தின் சாசனத் தலைவா் பி.முஹம்மதுயாசின், மண்டல துணை ஆளுநா் எஸ்.திருஞானசம்பந்தம் வாழ்த்துரை வழங்கினா். மாற்றுத்திறனாளி சக்திவேல், சுரேஷ் ஆகியோருக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

விழாவில், ஆா்.வி.சாமிநாதன், சங்கத்தின் உறுப்பினா்கள் ஜி.பி.விஜயபாலன், என்.பாவிக் பட்டேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் பொருளாளா் ஆா்.அருள், சி.புத்தநேசன், ஏ.ராஜா ஆகியோா் செய்திருந்தனா். நிகழ்வை முன்னாள் தலைவா் கிரீடு வி.நடனசபாபதி தொகுத்து வழங்கினாா். முன்னதாக, சங்க பொருளாளா் பி. சஞ்சீவிகுமாா் வரவேற்றாா். நிறைவில், சங்கச் செயலா் சி.ஏகாம்பரம் நன்றி கூறினாா்.