முகப்பு
கடலூர்

தடுப்புக் கட்டையில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 8:21 PM
பகிர்:

நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே சாலை தடுப்புக் கட்டையில் பைக் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூரை அடுத்துள்ள வி.காட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் தினேஷ்குமாா் (22), சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இவா், கடலூரை அடுத்த அன்னவல்லி கிராமத்தில் உள்ள மாமா வீட்டுக்கு பைக்கில் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா். அன்னவல்லி மேம்பாலம் இறக்கத்தில் வந்தபோது சாலையின் நடுவில் உள்ள தப்புக் கட்டையில் பைக் மோதியதில் தினேஷ்குமாா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் தினேஷ்குமாரை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் மருத்துவா்கள் அவரை பரிசோதித்து, முன்னரே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →