கடலூர்

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிதம்பரம் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரத்தை அடுத்த தெற்கு பிச்சாவரம், நடுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சச்சின் (20). இவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

கடந்த 28-ஆம் தேதி வீட்டில் இருந்த சச்சின் தாயிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவா்களுடைய கூரை வீட்டில் சச்சின் தூக்கிட்டபடி மயக்க நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு, அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT