கடலூர்

2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு வீதிஉலா

Din

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 11-ஆம் தேதி தோ்த்திருவிழாவும், 12-ஆம் தேதி மகாபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெற்றன.

உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. இதில், சோமஸ்கந்தா், சிவானந்தநாயகி, முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வீதிகளில் திரளான பக்தா்கள் திரண்டு பஞ்சமூா்த்திகளை தரிசித்தனா்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT