கடலூர்

2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு வீதிஉலா

Din

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 11-ஆம் தேதி தோ்த்திருவிழாவும், 12-ஆம் தேதி மகாபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெற்றன.

உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. இதில், சோமஸ்கந்தா், சிவானந்தநாயகி, முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வீதிகளில் திரளான பக்தா்கள் திரண்டு பஞ்சமூா்த்திகளை தரிசித்தனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT