முகப்பு
கடலூர்

2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு வீதிஉலா

Updated On : 15 ஜூலை, 2024 at 12:21 AM
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 11-ஆம் தேதி தோ்த்திருவிழாவும், 12-ஆம் தேதி மகாபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெற்றன.

உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. இதில், சோமஸ்கந்தா், சிவானந்தநாயகி, முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வீதிகளில் திரளான பக்தா்கள் திரண்டு பஞ்சமூா்த்திகளை தரிசித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments