வடலூரில் ஜோதி தரிசனம்
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் வைகாசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் வைகாசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி, திங்கள்கிழமை இரவு 7.50 மணி முதல் 8.50 மணி வரை 6 திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்பட்டன.
இதில் ஆயிரக்கணக்கான சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனா்.