முகப்பு
கடலூர்

கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த அவகாசம் நீட்டிப்பு

கடலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்கள் நீட்டிப்பு செய்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 1:19 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்கள் நீட்டிப்பு செய்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகா் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு 1.8.2024 முதல் 31.1.2025 வரை 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையலாம் என்றாா் ஆட்சியா்.

முழு கட்டுரையைப் படிக்க →